×

தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு

 

தஞ்சாவூர், மார்ச் 16: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களில் முழு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை டெல்டா மாவட்ட செயற் குழுக் கூட்டம் தஞ்சை சரோஜ் நினைவகத்தில் நேற்று நடைபெற்றது. தென் மேற்கு மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.தஞ்சை மாவட்ட நற்பணி அணி அமைப்பாளர் தரும சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் தர், திருபுவனம் நகரச் செயலாளர் மோகன், பட்டுக்கோட்டை நிர்வாகிகள் ஏனாதி புஷ்பராஜ், ஏசுராஜ், நாட்டுச்சாலை புதுமை விரும்பி, பேராவூரணி நிர்வாகிகள் குமார், தமிழரசன், பூதலூர் மாரிமுத்து, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கலைவாணி, வல்லம் ரெங்கேஷ்வரன், ரேணுகா, கரந்தை கார்த்திகேயன், மாரியம்மன்கோவில் முருகேஷ், ரமேஷ், காமராஜ், தியாகு, தஞ்சை விசிறி சாமியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நாடாளுமன்ற தேர்தலில் நம்மவர் கமல்ஹாசனின் தி.மு.க. கூட்டணி முடிவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. நம்மவரின் கூட்டணி நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் கமல்முருகேசன் வரவேற்றார். துணைச்செயலாளர் கலையரசன் நன்றி கூறினார்.

 

The post தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Thanjavur ,Maklak ,Neeti Mayyam ,Delta ,Thanjai ,People's Neeti Maiyam ,Parliamentary ,Election ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...