ஓசூர், மார்ச் 16: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி தொகுதி வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை கூட்டம், ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளரான முன்னாள் எம்எல்ஏ முருகன், மாநகர செயலாளரான மேயர் சத்யா, தொகுதி பார்வையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிரகாஷ் எம்எல்ஏ பேசியதாவது: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட 30 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை காட்டுகிறாரோ அவரே வேட்பாளர். தமிழக அரசை மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். தமிழக முதல்வர் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை வெற்றி பெறச்செய்ய வேண்டியது நமது கடமை. இந்த தேர்தல் ஆரியத்திற்கும் -திராவிடத்திற்கும் இடையே நடைபெறும் போர்.
இது மிகப்பெரிய சவால். நமது வேட்பாளர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். எனவே, அனைவரும் இரண்டு மாதத்திற்கு கடுமையாக உழைத்து, திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மற்றும் எல்லோராமணி, சீனிவாசன், துணை மேயர் ஆனந்தய்யா, ராமு, திம்மராஜ், செந்தில்குமார், சுமன், கலைச்செழியன், வீராரெட்டி, சக்திவேல், ரவி, கண்ணன், கோபாலகிருஷ்ணன், ஒஸ்டியா வடிவேல், ஆதிதிராவிடர் நலக்குழு குரு(எ) முனிராஜ், அனிதா முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.