×

கிண்டியில் காவல்துறை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்: உதவி கமிஷனர் திறந்து வைத்தார்

ஆலந்தூர்: கிண்டியில் காவல்துறை சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. சென்னையில் நாளுக்கு நாள் கோடை வெயில் உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உஷ்ணம் தாளாமல் பெரும் அவதிபடுகின்றனர். தாகத்தை தீர்ப்பதற்க்காக இங்கும் அங்கும் அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் சார்பாக ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இணையாக போலீசாரும் பொதுமக்களுக்கு மோர் வழங்குவது, தண்ணிர் வழங்குவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கிண்டி போலீசார் சார்பில் காவல் நிலையம் எதிரே பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர். இந்த தண்ணீர் பந்தலை கிண்டி காவல் உதவி கமிஷனர் சிவா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர் போன்றவற்றை வழங்கினார். ஆய்வாளர் பிரபு, காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிண்டியில் காவல்துறை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்: உதவி கமிஷனர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Summer water festival ,Guindy ,Alandur ,Chennai ,Summer Water Pandal ,Assistant Commissioner ,Dinakaran ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...