×

திருட்டு செல்போன் விற்பனை கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இரவு கடையில் இருந்தபோது, 2 பைக்கில் வந்த 3 பேர், பிரபுவிடம் பணம் கேட்டு கத்திய காட்டி மிரட்டினர். அப்போது, பிரபு பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த கும்பல், பிரபுவின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு, கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.20 ஆயிரம் பணம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து, பிரபு அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து ஒரகடம் போலீசார், கொள்ளையர்கள், பயன்படுத்திய வாகன எண்ணை வைத்து பழையசீவரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (26) என்பவனை கைது செய்து நடத்திய விசாரணையில், தனது கூட்டாளிகள் 2 பேருடன் கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

மேலும், திருடப்பட்ட செல்போன்கள் அனைத்தையும், வாலாஜாபாத் பகுதியில் உள்ள செல்போன் கடையில் கொடுத்தால் தனக்கு விற்று பணம் தருவார்கள் என தெரிவித்துள்ளார். அவன் அளித்த தகவலின்படி திருட்டு செல்போன்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் கமல்ராஜ் (38) என்பனை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

The post திருட்டு செல்போன் விற்பனை கடைக்காரர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Prabhu ,Panruti ,Oragadam ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...