×

திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய வாடகை பாக்கி: விரிவான பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை சார்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். முறையாக வாடகை செலுத்தத் தவறிய நெல்லை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவும். கோயிலுக்கு சேர வேண்டிய ரூ.54.35 லட்சம் வாடகை பாக்கியை உடனே செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அறநிலையத்துறை தரப்பில் கோயிலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த 3 மாத கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி தலைமையில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி எப்போது வாடகை பாக்கியை செலுத்துவீர்கள் என்ற விவரத்தை வரும் வெள்ளிக்கிழமை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் விரிவான பதில் அளிக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

The post திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய வாடகை பாக்கி: விரிவான பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,Tiruchendur ,Radhakrishnan ,Thiruthonda Sabha ,Madurai ,Court ,Nellai District ,Charity Department ,ICourt ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்