×

2 மகள்களுடன் இளம்பெண் மாயம்

தர்மபுரி, மார்ச் 15: பெரும்பாலை அருகேயுள்ள நாகமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் பெங்களூருவில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள் (32). இவர்களுக்கு தேவிகா (16), ராஜேஸ்வரி (14) என 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈஸ்வரன் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 8ம்தேதி, அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நடந்த தெருக்கூத்தை பார்ப்பதற்காக, முத்தம்மாள் தனது 2 மகள்களுடன் சென்றார். பின்னர், அவர்கள் 3பேரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால், இதுபற்றி ஈஸ்வரன் பெரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 மகள்களுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Dharmapuri ,Iswaran ,Nagamarathuppallam ,Perumbalai ,Bangalore ,Muthammal ,Devika ,Rajeshwari ,
× RELATED பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்