×

ஜிப்மர் மருத்துவர் தற்கொலை முயற்சி- பரபரப்பு

புதுச்சேரி, மார்ச் 15: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மணிவேல் (28). திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கும், இவரது தந்தைக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணிவேல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு பழைய துறைமுகம் கடற்கரைக்கு வந்த மணிவேல், பழைய துறைமுகத்தில் உள்ள பாலத்தின் மீது ஏறி நின்றுள்ளார். பின்னர் திடீரென கடலில் குதித்து மணிவேல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் உயிர்பயம் ஏற்படவே, அருகிலிருந்த உடைந்த பாலத்தின் தூணை பிடித்து கொண்டு காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார், அவரை மீட்டனர். விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக மணிவேல் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு அறிவுரை வழங்கிய போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post ஜிப்மர் மருத்துவர் தற்கொலை முயற்சி- பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Jipmar ,Puducherry ,Manivel ,Jipmar Hospital ,Dindigul district ,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...