×

குஷ்பு மீது காவல் நிலையத்தில் புகார்

உளுந்தூர்பேட்டை, மார்ச் 15: கள்ளக்குறிச்சி மாவட்டம் திமுக மகளிர் அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் கலா மற்றும் துணை அமைப்பாளர் அமுதா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதை கண்டித்து, திட்டத்தை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜ நிர்வாகி குஷ்பு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகனிடம் புகார் மனு அளித்துள்ளனர். மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் கிலியாம்பாள், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் விஜய பார்த்திபன், நகர அமைப்பாளர் ஸ்டாலின் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post குஷ்பு மீது காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Khushbu ,Ulundurpet ,Kallakurichi ,district ,DMK ,team ,Kala ,Amutha ,Tamil Nadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...