- பொன். ஆசைத்தம்பி
- குளித்துரா பேரூராட்சி
- மார்த்தாண்டம்
- சிம்லியார் சாலை
- குலித்துறை
- பொன்.ஆசைத்தம்பி
- தின மலர்
மார்த்தாண்டம், மார்ச் 15: குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட சிங்களேயர் சாலையில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இந்த சாலையை சீரமைப்பதற்காக ரூ.1 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலையில் வடிகால் வசதியுடன் இன்டர்லாக் சாலையாக சீரமைமைக்கும் பணியை குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி நேற்று தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ராம திலகம் முன்னிலை வகித்தார். பொறியாளர் குறள் செல்வி, நகராட்சி ஓவர்சியர் விஜயராஜ், கவுன்சிலர்கள் அருள்ராஜ், ஜலீலா ராணி மற்றும் ஷாஜி லால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குழித்துறை நகராட்சி 20வது வார்டுக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் பின்புறம் உள்ள சாலையில் இருந்து நந்தன்காடு வரை செல்லும் சாலையில் இன்டர்லாக் அமைக்கும் பணியையும் குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். இதில் வார்டு கவுன்சிலர் சர்தார் ஷா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post குழித்துறை நகராட்சியில் ₹1.6 கோடியில் சாலை சீரமைப்பு பொன்.ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.