×

மிசோரமுக்குள் பெர்மிட் இல்லாமல் நுழைந்த 1000 பேர் கைது

அய்ஸால்: மிசோரமில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வருவதற்கு இன்னர்லைன் பெர்மிட்) பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. பெர்மிட் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வெளி மாநிலத்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்நிலையில்,மிசோரம் மாநிலத்தின் பல பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பெர்மிட் இல்லாமல் தங்கி இருந்த 6 சிறுவர்கள் உட்பட 1000 பேரை கைது செய்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.

The post மிசோரமுக்குள் பெர்மிட் இல்லாமல் நுழைந்த 1000 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Aizawl ,Dinakaran ,
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி