×

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சனை, திருமணம் தாண்டிய உறவை கைவிடாததால் சொந்த அண்ணியை, இளைஞர் வெட்டிக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதியான எப்போதும் வென்றான், கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னமணி. இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். சின்னமணிக்கு ஒரு ஆண், பெண் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இவரது கணவர் வைரமுத்து கடந்த 8 வருடம் முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சின்னமணி, கணவர் இறப்பிற்கு பிறகு தூத்துக்குடி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

சின்னமணி, அவரது மகளுடன் ரேஷன் பொருட்களை பெற்று வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வைரமுத்துவின் தம்பியான ராஜேஷ் கண்ணன், சின்னமணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜேஷ் கண்ணன் தான் மறைத்து கொண்டுவந்த ஆயுதத்தால் சின்னமணியை வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார், தப்பி சென்ற ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தனது அண்ணன் இறந்த பிறகு சின்னமணியை தனது அரவணைப்பில் வைத்திருந்ததாகவும், அவருக்கு மேலும் சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் வெட்டிக்கொன்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தனது அண்ணண் மனைவியை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை!! appeared first on Dinakaran.

Tags : Vlathikulam, Tuticorin district ,Thoothukudi ,Vlathikulam ,Thoothukudi district ,Ottapidaram ,Vlathikulam, Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி எனது 2வது தாய் வீடு