×

வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: வார இறுதி நாட்களை ஒட்டி தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள், மார்ச் 17ல் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். தமிழ்நாடு முழுவதும் அதிக பேர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு நாளை 360 பேருந்துகள் இயக்கப்படும். நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் ஈரோடு, திருப்பூருக்கு நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

The post வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Tamil Nadu Transport Corporation ,Tamil Nadu ,Tamilnadu… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...