×

தருமபுரி அருகே காணாமல்போன 10 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!!

தருமபுரி: தருமபுரி அருகே மிட்டாரெட்டிஅள்ளி பகுதியில் காணாமல்போன 10 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டார். மன்மதன் – சீதா தம்பதியின் 10 வயது மகன் நேற்று காணாமல் போனது குறித்து இளைஞர் இளங்கோவிடம் போலீஸ் விசாரணை செய்து வந்தது. இளைஞர் இளங்கோ, சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கிணற்றில் தள்ளிவிட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. சிறுவனை கொன்று நாடகமாடிய இளங்கோவை கைது செய்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தருமபுரி அருகே காணாமல்போன 10 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Mittarettialli ,Manmadhan-Sita ,Elango ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...