×

திருமணமான பெண் மாயம்

கிருஷ்ணகிரி, மார்ச் 14: சூளகிரி அடுத்த மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிக்குமார். இவரது மனைவி மாதம்மாள் (26). கடந்த 11ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற மாதம்மாள், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி ஹரிக்குமார் சூளகிரி போலீசில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜ்குமார் என்பவருடன், மாதம்மாள் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். எனவே, தனது மனைவியை அவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமான பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Harikumar ,Marandaalli ,Choolagiri ,Mathamal ,Mathamaal ,Mayam ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை...