×

சிதம்பரம் அருகே நகை திருடிய வாலிபர் கைது

சிதம்பரம், மார்ச் 14: சிதம்பரம் அருகே உள்ள மணலூர் லால்புரம் தாமோதரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராசு(65). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றியவர். கடந்த 3ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து செல்வராசு, சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, கோபி, உள்ளிட்ட போலீசார் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் புறவழிச் சாலையில் பொய்யாபிள்ளை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் காரில் இருந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயபாண்டியன் மகன் பிரவின் என்கிற பிரசாத் (34) என்பதும், செல்வராசு வீட்டில் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பிரசாத்தை போலீசார் கைது செய்து, காருக்குள் இருந்த 19 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிதம்பரம் அருகே நகை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Selvarasu ,Lalpuram Damodaran Nagar ,Manalur ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!