×

குத்தாலம் அருகே சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

 

குத்தாலம்,மார்ச்14: குத்தாலம் அருகேயுள்ள முருகமங்கலம் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தணிக்கையாளர் பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமிசங்கர் முன்னிலை வகித்தார். மக்கள் நலப் பணியாளர் சங்கர் வரவேற்றார். இக்கூட்டத்தில் முருகமங்கலம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், கிராம வள அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரஞ்சிதா நன்றி கூறினார்.

The post குத்தாலம் அருகே சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Social audit village council ,Guthalam ,Guttalam ,audit ,Murugamangalam panchayat ,Auditor ,Prem Anand ,Panchayat ,President ,Jayalachumi Shankar ,People's Welfare Officer ,Shankar ,Dinakaran ,
× RELATED கொட்டாம்பட்டி பகுதியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்