×

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாலக்காடு பிளாக் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம்

 

பாலக்காடு, மார்ச் 14: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாலக்காடு பிளாக் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனத்தை தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த சட்டத்தை கண்டித்து பாலக்காடு கோட்டை மைதானத்தின் அருகே அமைந்துள்ள ஐந்து விளக்கு சந்திப்பு சாலையில் பாலக்காடு பிளாக் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். முன்னதாக, இந்த போராட்டத்தை ஐக்கிய ஜனநாயக முன்னணி பாலக்காடு மண்டல தலைவர் சுதாகரன் தொடங்கி வைத்தார். பாலக்காடு பிளாக் காங்கிரஸ் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார்.

The post குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாலக்காடு பிளாக் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Palakkad Block ,Congress ,Palakkad ,Palakkad Block Congress Committee ,Union Government ,Palakkad Fort ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்