×

விசாரணையை தள்ளிவைக்ககோரி செந்தில்பாலாஜி மனு அமலாக்கத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாராஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மறு ஆய்வு மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை தொடங்க முடியாது என்றும் அமலாக்க துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்க துறை தொடர்ந்த வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது.

இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை ஏப்ரல் 25க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். இதற்கிடையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி எஸ்.அல்லி நேற்று விசாரித்த வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் செந்தில் பாலாஜியின் காவலையும் 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

The post விசாரணையை தள்ளிவைக்ககோரி செந்தில்பாலாஜி மனு அமலாக்கத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Senthil Balaji ,CHENNAI ,Senthil Paraji ,Principal Sessions Court of Chennai ,Senthilbalaji ,Court ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33ஆவது முறையாக நீட்டிப்பு