×

தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

 

போச்சம்பள்ளி, மார்ச் 13: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே, நாகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன் மனைவி தேன்மொழி (42). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் திடீரென தேன்மொழி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்தார். இதையடுத்து தேன்மொழி கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூங்கிய பெண்ணிடம் தங்க நகையை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Matayan ,Thenmozhi ,Nagampatti ,Mathur ,Krishnagiri district ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...