×

போலீஸ் ஸ்டேசனில் பூங்கா திறப்பு

 

சிவகங்கை, மார்ச் 13: சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேசன்களில் புகார் அளிக்க வருபவர்களின் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறுவர் பூங்கா அமைக்க கலெக்டர் ஆஷாஅஜித் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவரது ஆலோசனையின் பேரில் சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சிஎம்.துரைஆனந்த் சொந்த நிதியில் இருந்து இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.பூங்காவை சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய்சௌந்தர்யன் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துரைமுருகன், பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் மற்றும் போலீசார், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post போலீஸ் ஸ்டேசனில் பூங்கா திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivaganga All Women Police Station ,Asha Ajith ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...