×

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 3 சவரன் நகை ரூ.1.3 லட்சம் திருட்டு

மாதவரம்: சென்னை செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமுதா (58). இவர் ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நகை வாங்குவதற்காக வீட்டில் இருந்து ரூ.1.3 லட்சம் மற்றும் 3 சவரன் பழைய நகை உள்ளிட்டவற்றை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு ஓட்டேரி செல்லப்பா தெருவில் பணிபுரியும் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வேலையை முடித்துவிட்டு மாலை 6 மணியளவில் ஜமாலையா பேருந்து நிறுத்தத்தில் தடம் எண் 64 என்ற பேருந்தில் ஏறி மூலக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து வரும்போது தனது பையில் இருந்த பணத்தை பார்த்தபோது பணம் மற்றும் நகை காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குமுதா திருவிக நகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 3 சவரன் நகை ரூ.1.3 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Madhavaram ,Kumuda ,Sengunram Mondiamman Nagar, Chennai ,Otteri Chellappa Street ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!