×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.2.25 கோடியில் பணியாளர்கள் குடியிருப்பு: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை: 2021 – 2022ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், “சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் திருக்கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இப்புதிய குடியிருப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் லட்சுமணன்,ஜெயராமன், ரேணுகாதேவி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் காமராஜ், திருக்கோயில் துணை ஆணையர் நித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.2.25 கோடியில் பணியாளர்கள் குடியிருப்பு: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni Parthasarathi Temple ,Minister ,Udayanidhi ,Chennai ,Hindu Religious Endowment Department ,Tiruvallikeni Arulmiku Parthasarathy Swamy Temple ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...