×

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு: ஒன்றிய சுகாதாரத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ்

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த வழக்கில் ஒன்றிய நிதி மற்றும் சுகாதாரத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மாதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை செயலரும் பதில்தர உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை எய்ம்ஸ்-ஐ நீதிமன்றம் வகுக்கும் காலத்திற்குள் கட்ட உத்தரவிடக்கோரி ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 36 மாதங்களில் கட்டுமானப்பணி நிறைவடையும் என்று கூறியும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை என்று மனு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு: ஒன்றிய சுகாதாரத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,Union Health ,Madurai ,Madurai High Court ,Union Finance ,Madurai AIIMS Court ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...