×

அரியலூரில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

அரியலூர், மார்ச் 12: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் மீரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக நீதி பேச்சுப் போட்டி மற்றும் எஸ்.சி, எஸ்.டி யினர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் தலைமை வகித்ததர். கல்லூரி தாளாளர் எம்.ஆர்.கமல்பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை உதவி ஆட்சியர் விஜயபாஸ்கர் மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு சமூக நீதிக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆண்டனி ஹரி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக அக்கல்லூரியின் முதல்வர் மேஜர் விஜய் வரவேற்றார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் உஷாராணி நன்றி கூறினார்.

 

The post அரியலூரில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,District Social Justice and Human Rights Division ,Dinakaran ,
× RELATED அரியலூர் அருகே பெண்ணின் ஆபாச...