×

அடுத்தடுத்து கடைகளில் பணம், செல்போன் திருட்டு

 

நாமக்கல், மார்ச்12: நாமக்கல் அருகே, நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளில் புகுந்து பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் வள்ளிபுரம் பைபாஸ் அருகே லாரி பட்டறைகள், லாரி புக்கிங் அலுவலகம் மற்றும் நிதி நிறுவனம், டீக்கடைகள் மற்றும் பழைய இரும்பு கடைகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் லாரி புக்கிங் அலுவலகம் மற்றும் நிதி நிறுவனம் ஆகியவை பூட்டப்பட்டிந்தது. நேற்று காலை லாரி புக்கிங் அலுவலகத்தை உரிமையாளர் அன்பழகன், நிதி நிறுவன அலுவலகத்தை வெங்கடேசனும் திறந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்து ரொக்க பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 வரை, தலையில் குல்லா அணிந்த நபர் ஒருவர், லாரி பட்டறை, பழைய இரும்பு கடை, லாரி புக்கிங் அலுவலகம், நிதி நிறுவன அலுவலகத்தை திறந்து, பீரோ, மேசைகளை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்றது தெரியவந்தது. மொத்தம் ₹80 ஆயிரம் திருடப்பட்டு உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அடுத்தடுத்து கடைகளில் பணம், செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Vallipuram Bypass ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...