×

1.4 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

 

தேன்கனிக்கோட்டை, மார்ச் 12: தேன்கனிக்கோட்டையில் 1.4 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி குடிமைப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் சங்கீதா, எஸ்ஐ பெரியசாமி, அருள்பிரகாஷ், பெருமாள் மற்றும் போலீசார், கடந்த 10ம் ேததி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவில், கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் தலா 50 கிலோ எடை கொண்ட 28 மூட்டைகளில் சுமார் 1400 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த இர்பான் (24), மெஹபூப் அலி (19) ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 

The post 1.4 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Krishnagiri Civil Survey Department ,Inspector ,Sangeetha ,SI Periyasamy ,Arulprakash ,Perumal ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு