- சாத்தான்குளம் பள்ளி
- தென் மண்டல கராத்தே போட்டி
- சாத்தான்குளம்
- 24வது தென் மண்டல கராத்தே போட்டி
- சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளி
- விஸ்டம் பப்ளிக் பள்ளி
- வீரபாண்டியன்பட்டினம்
- திருச்செந்தூர்
- மதுரை
- சிவகங்கை
- பிறகு நான்
- விருதுநகர்
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- கன்னியாகுமாரி
சாத்தான்குளம், மார்ச் 11: திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் விஸ்டம் பப்ளிக் பள்ளியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் 24வது தென்மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. போட்டியில் மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியின் தலைமை நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும், தொழில்நுட்ப இயக்குநருமான சுரேஷ்குமார் செயல்பட்டார். இதில் சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் முத்துராஜா தலைமையில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் கட்டா பிரிவில் 20 தங்கப் பதக்கத்தையும், 11 வெள்ளி பதக்கத்தையும், 17 வெண்கலப் பதக்கத்தையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளரும், முதல்வருமான பேட்ரிக் ஆண்டனி விஜயன், பள்ளி ஆசிரியர்கள் கேத்தரின், பாலா மற்றும் பெற்றோர் பாராட்டினர்.
The post தென்மண்டல கராத்தே போட்டி சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.