×

குணா குகையில் நுழைய முயன்ற 3 பேர் கைது

கொடைக்கானல்: மலையாள திரைப்படத்தின் வெற்றியால் கொடைக்கானல் குணா குகையை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வர துவங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குணா குகை பகுதிக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய் (24), பாரத் (24), ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் (24) ஆகியோர் தடை செய்யப்பட்ட குணா குகை பகுதிக்குள் நுழைந்தனர். தகவலறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து 3 பேரையும் கைது செய்தனர்.

The post குணா குகையில் நுழைய முயன்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Guna cave ,Kodaikanal Guna Cave ,Vijay ,Krishnagiri ,Bharat ,Ranjith Kumar ,Ranipet district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம்