×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காதொலி கருவிகள்: கலெக்டர் வழங்கினார்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பள்ளி குழந்தைகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 540 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியுடன் இணைந்து 82 பயனாளிகளுக்கு ரூ.6.56 லட்சம் மதிப்பில் வழங்கப்படவுள்ள காதொலி கருவிகள் 5 பள்ளி குழந்தைகளுக்கும் மற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய மகளிருக்கு விருதுகளையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் கல்யாணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காதொலி கருவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,People's Grievance Day ,Kanchipuram District Collector's Office ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...