×

பேருந்து மோதி மூதாட்டி பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ரேவதி (52). இவருடன், அவரது தாய் செல்லம்மாள் (80) வசித்து வந்தார். செல்லம்மாளின் மற்றொரு மகள் மாரியம்மாள், பூந்தமல்லி சித்துக்காட்டில் வசித்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மகளை, பார்ப்பதற்காக செல்லம்மாள் சென்று வருவது வழக்கம்.

அதேபோன்று, நேற்று முன்தினம் சித்துக்காட்டில் உள்ள மகளை பார்ப்பதற்காக செல்லம்மாள், பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, பூந்தமல்லியில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகர பேருந்து, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, செல்லம்மாளின் மீது மோதியது.

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த செல்லம்மாளை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செல்லம்மாள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
பூந்தமல்லி போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேருந்து மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Revathi ,Arumugam Street, Nasarathpet ,Chelammal ,Mariammal ,Chellammal ,Poontamalli, Siddukad ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்