×

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியையின் கணவர் கைது

வளசரவாக்கம்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில், டியூஷனுக்கு சென்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன், டியூஷன் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது வாட்டர் பாட்டிலை மறந்து விட்டதால், மீண்டும் டியூசன் சென்டருக்கு சென்று அந்த பாட்டிலை எடுக்க சென்றுள்ளார்.

அப்போது, அந்த அறையில் இருந்த டியூஷன் ஆசிரியையின் கணவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், பயந்துபோன சிறுமி சத்தம் போட்டபடி வெளியே ஓடிவந்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்ததும் இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்து சிறுமி அழுதுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் ஆசிரியையின் கணவர் வேணுகோபால் (55) என்பவரை நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியையின் கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Chennai ,Tucson ,
× RELATED திருமங்கலத்தில் பேருந்து...