×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை தினமான நேற்று 76,213 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 19,477 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று மாலை எண்ணப்பட்டது. இதில் ரூ.3.88 கோடி காணிக்கையாக கிடைத்தது.

இந்நிலையில் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 12 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் ெசய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Eyumalayan temple ,Tirumala ,Swami ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி