×

நெல்லை அருகே மார்ச் 7ம் தேதி போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி உயிரிழப்பு

நெல்லை: நெல்லை வீரவநல்லூர் அருகே மார்ச் 7ம் தேதி போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி உயிரிழந்தார்.

நெல்லை வெள்ளாங்குழி பகுதியில் கடந்த 7ம் தேதியன்று அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரை வெட்டி விட்டு பேச்சிதுரை தப்பியோடினார். அப்போது தடுக்க வந்த காவலரையும் தாக்கி விட்டு தப்பியோடிய பேச்சிதுரையை போலீசார் சுட்டு பிடித்தனர்.

இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேச்சிதுரை தற்போது உயிரிழந்தார். பேச்சித்துரை உயிரிழப்பை தொடர்ந்து, நெல்லையில் வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post நெல்லை அருகே மார்ச் 7ம் தேதி போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Nella ,Raudi ,Nella Weeravanallur ,Bechidura ,Nella Vellanguzhi ,Nellu ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது!