×

ராதாபுரம் அருகே காற்றாலையில் காப்பர் கம்பி திருட்டு

 

நெல்லை, மார்ச் 11: ராதாபுரம் அருகே வையகவுண்டன்பட்டியில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில் ராதாபுரம் லெப்பைகுடியிருப்பு நாராயணசுவாமி கோயில் தெருவை சேர்ந்த நாகராஜன்(36) கண்காணிப்பாளராக பணி செய்து வருகிறார்.இந்நிலையில் காற்றாலை நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த காப்பர் கம்பி திருடுபோனது அவருக்கு தெரியவந்தது. திருடுபோன காப்பர் கம்பியின் மதிப்பு ரூ. 7 ஆயிரமாகும். இதுகுறித்து அவர் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து காப்பர் கம்பியை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

The post ராதாபுரம் அருகே காற்றாலையில் காப்பர் கம்பி திருட்டு appeared first on Dinakaran.

Tags : Radhapura ,Nella ,Viyagoundanpatti ,Nagarajan ,Narayanaswamy Temple Street, Radhapuram Leppi-Residence ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் 576வது இடம் பிடித்து...