×

ரயில் நிலையத்தில் பணிகள் மந்தம்

 

திருப்பூர், மார்ச் 11: அமாவாசை என்பதால் திருப்பூர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் வராததால் கூட்டம் குறைந்து காணப்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்வார்கள்.

இந்த மீன் மார்க்கெட்டில் கடல், டேம் மீன்கள் விற்பனை செய்வது வழக்கம். தொழிலாளர்கள் நிறைந்த ஊரான திருப்பூரில் மீன்களை வாங்குவதற்கு ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அமாவாசை என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் குறைந்ததால் விற்பனையும் குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரயில் நிலையத்தில் பணிகள் மந்தம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur fish ,Thennampalayam Fish Market ,Tirupur Palladam Road ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...