×

தபால் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்: 21ம் தேதி நடக்கிறது

 

திருப்பூர், மார்ச் 11: திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜய தனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தபால் சேவையை பற்றி விவாதிக்க திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 21-ம் தேதி மாலை 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது யோசனையை தெரிவிக்கலாம். மேலும், விஜயதனசேகர், அஞ்சல கோட்ட கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலையம் திருப்பூர் – 641 601 என்ற முகவரிக்கு தபால் வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post தபால் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்: 21ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Postal Division ,Superintendent ,Vijaya Dhanasekhar ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...