×

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

 

நாமக்கல், மார்ச் 11: நாமக்கல் அருகே, வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல்லை அடுத்த பெரிய அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (54). இவரது கணவர் பாண்டியன் இறந்து விட்டார். இதனால், தங்கமணி தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை, முத்தூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். பின்னர், இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகை, ரூ. 25 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் யாருமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்து. இது குறித்து நல்லிபாளையம் போலீசில், தங்கமணி புகார் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Thangamani ,Ayyampalayam ,Pandian ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...