×

வீடுபுகுந்து பெண்ணிடம் 7 சவரன் தாலி சரடு பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை

 

திருவண்ணாமலை, மார்ச் 11:திருவண்ணாமலை அருகே அதிகாலை வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சரடை மர்ம ஆசாமி பறித்துசென்றுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா நாடழகானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நளினி. இவர் திருவண்ணாமலை அடுத்த அழகானந்தல் கிராமத்தில் உள்ள தாயார் ராணி என்பவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால், அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம்போல் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, நளினி கழுத்தில் இருந்து ஏழரை சவரன் தாலி சரடை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நளினி ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம ஆசாமி தாலி சரடை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.இதுகுறித்து நளினி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

The post வீடுபுகுந்து பெண்ணிடம் 7 சவரன் தாலி சரடு பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Nalini ,Nadalakanandal ,Sengam taluk, Thiruvannamalai district ,Karanthal ,Tiruvannamalai ,Savaran ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...