×

அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,Tamil Nadu ,Ramdas ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...