×

மதுபோதையில் சிறுவனை பின்தொடர்ந்து சென்றாரே தவிர, கடத்தும் முயற்சி எதுவும் நடக்கவில்லை: காவல்துறை விளக்கம்

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி குறித்து கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன் செய்தியாளர் சந்திப்பில், “குழந்தை கடத்தல் முயற்சி நடந்ததாக வந்த புகாரை அடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றோம். குழந்தை கடத்தல் புகாரின் உண்மைத் தன்மையை அறிய 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறுவன் ஒருவனை மதுபோதையில் இருந்த நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிறுவனின் உறவினர் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுபோதையில் சிறுவனை பின்தொடர்ந்து சென்றாரே தவிர, கடத்தும் முயற்சி எதுவும் நடக்கவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மதுபோதையில் சிறுவனை பின்தொடர்ந்து சென்றாரே தவிர, கடத்தும் முயற்சி எதுவும் நடக்கவில்லை: காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nungambakkam ,Eastern ,Joint Commissioner ,Dharmarajan ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...