×

ரயிலில் வந்த பெண்ணிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை-திருச்சி மங்களூரு விரைவு ரயிலில் பயணித்த கவிதா என்பவரிடம் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்களின்றி ரூ.40 லட்சத்தை எடுத்துச் சென்ற கவிதா (44) என்பவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.40 லட்சத்தை வருமானவரித்துறையிடம் ரயில்வே போலீஸ் ஒப்படைத்தது. புதுக்கோட்டையில் உள்ள தனது சகோதரருக்கு தருவதற்காக கவிதா பணம் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயிலில் வந்த பெண்ணிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kavita ,Tiruchi Mangalore Express ,
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை