×

வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை: வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு ஊதிய உயர்வு அமல்படுத்துகிறது. ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊதிய உயர்வு மூலம் நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,254 கோடி செலவாகும்.

The post வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union government ,CHENNAI ,Indian Banks Association ,Bank Employees Unions ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...