- ராமநாதபுரம் கலெக்டர்
- ராமநாதபுரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்
- தின மலர்
ராமநாதபுரம், மார்ச் 9: தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளில் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
அதன்படி 2023- 2024ம் ஆண்டில் மாவட்டத்தின் பிறப்பு பாலின விகிதம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், உயர் பிறப்பு விகிதம், கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள், சட்டம் ஆகிய காரணிகளை கவனமுடன் பரிசீலித்து ராமநாதபுரம், காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்ட நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது, அம்மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளதை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.
The post ராமநாதபுரம் கலெக்டருக்கு முதலமைச்சர் விருது appeared first on Dinakaran.