×

மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பேருக்கு வலை

ஊத்தங்கரை, மார்ச் 9: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகே குன்னத்தூர் ராஜவீதியைச் சேர்ந்தவர் சுசீலா (74). இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென சுசீலாவின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து சாமல்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Sushila ,Kunnathur Rajaveedi ,Samalpatti ,Uthangarai, Krishnagiri district ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு