×

ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் திரிணாமுல் பிரமுகர் ஷாஜகான் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

கொல்கத்தா: அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக். கடந்த ஜனவரியில் ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக ஷாஜகானிடம் விசாரணை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்,3 அதிகாரிகள் காயமடைந்தனர். கடந்த 29ம் தேதி ஷாஜகான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 6ம் தேதி ஷாஜகானை சிபிஐயிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.இந்நிலையில் ஷாஜகான் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையை ஒட்டி அந்த பகுதியில் ஒன்றிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

The post ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் திரிணாமுல் பிரமுகர் ஷாஜகான் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : ED ,CBI ,Trinamool ,Shahjahan ,Kolkata ,Trinamool Congress ,West Bengal ,Shahjahan Sheikh ,Dinakaran ,
× RELATED திமுகவினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு: திமுக புகார்