×

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்த வண்ணம் உள்ளது. 6ம் தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,320க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6105க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,840க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இருந்த அதிகபட்ச விலை என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. 29ம் தேதி முதல் நேற்று வரை சுமார் ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை ரூ.49 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

The post தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்தை நெருங்கியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...