×

சிங்கம்புணரி அருகே தீப்பற்றி வைக்கோல் போர் நாசம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே, வைக்கோல் போரில் பற்றிய தீயை தீயனைப்பு வீரர்கள் அணைத்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வகுத்தெழுவன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா. விவசாயி. இவரது வயலில் சாகுபடி செய்யப்பட்ட நெல், சில தினங்களுக்கு முன் அறுவடை செய்யப்பட்டது. நெல் மணிகளை பிரித்த பின்னர் சேகரமான வைக்கோலை கால்நடைகளின் தீவனத்திற்காக தனக்கு சொந்தமான இடத்தில் சேமித்து வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரமாகும்.

இந்நிலையில், நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென வைக்கோல் போரில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து சிங்கம்புணரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post சிங்கம்புணரி அருகே தீப்பற்றி வைக்கோல் போர் நாசம் appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Chinnaiya ,Vakutheluvanpatti ,Sivagangai ,Dinakaran ,
× RELATED பட்டுக்கோட்டை எஸ்.எஸ்.எம் ஜூவல்லரியில் அட்சய திருதியை கொண்டாட்டம்