×

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சத்துடன் பிடிபட்ட பெண்ணால் பரபரப்பு

திருச்சி, மார்ச் 8: திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில், பெண் பயணிஒருவர் ரூ.40 லட்சத்துடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) காலை ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து வந்த ரயிலில், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், ரூ.40 லட்சத்தை (ஐநூறு ரூபாய் கட்டுகள்) பையில் வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

அவற்றுக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த பெண்ணிடம் அவரது கணவர் தனது சகோதரரின் இல்ல விழா மற்றும் கட்டிட பணிகளுக்காக கொடுத்தனுப்பியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உரிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் காட்டிய பின்னர் ரூ.40 லட்சத்தை பெண்ணிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சத்துடன் பிடிபட்ட பெண்ணால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy railway station ,Trichchi ,Trichy Junction train station ,
× RELATED தேர்தல் எதிரொலி திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை