×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

வேலூர், மார்ச் 8: காட்பாடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் மாலை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதேபகுதியைச் சேர்ந்த சாமுராய் என்கின்ற ஜெகதீசன்(20) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஜெகதீசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Katpadi ,Gadpadi ,Gadpadi Brahmapuram ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...