×

கிராமத்திற்குள் நுழைந்த யானைகள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே பரபரப்பு

குடியாத்தம், மார்ச் 8: குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற 8 காட்டுயானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தனா, வி டி பாளையம், கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு உள்ள பயிர்களை சேதம் செய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த கனவாய்மோட்டூர் கிராமத்தில் ஒரு குட்டியுடன் 7 காட்டு யானைகள் பயங்கர பிளீறல் சத்தத்துடன் விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால் நேற்று அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கிராமத்திற்குள் நுழைந்த யானைகள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Gudiatham ,Vellore District ,Gudiyatham ,Thanakondapalli ,Sainagunda ,Veerishettipalli ,Baradarami ,Kotamita ,Morthana ,VD Palayam ,Kathirkulam ,
× RELATED பண்ணையில் 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின குடியாத்தம் அருகே பரிதாபம்